சமூக சிந்தனையும், கலாச்சார விழிப்புணர்வும் ஒருங்கே கலக்கும் புதிய ஊடக முயற்சியாக “இரவி FM” இணைய வானொலி இன்று (நவம்பர் 1) தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
இந்த தொடக்க விழாவில், ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் பால. மணிவண்ணன் அவர்கள் ஒலிபரப்பு அரங்கை திறந்து வைத்தார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன் அவர்கள், “சமுதாய மாற்றத்திற்கான ஊடகப் பொறுப்பு இணைய வானொலிகளின் வழியே விரிவடைகிறது” எனக் கூறி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தார்.
பிரித்திங்கா ஆலய சத்குரு சீனிவாச சித்தர் மற்றும் டி. சவேரியார் புரம் பங்குத்தந்தை குழந்தை ராஜன் ஆகியோர் *‘வானொலி இலச்சினை’*யை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர். இலக்கியப் பேச்சாளர் ஷெரிப் அவர்கள் நிகழ்ச்சி குறிப்பேட்டை வெளியிட, அதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மின்னிதழ் ஆர்வலர் செல்வின் மற்றும் வணிகச் செயல்பாட்டாளர் லாரன்ஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சமூக ஊடக உலகில் புதிய குரலாகத் திகழும் “இரவி FM” வானொலி நிகழ்ச்சிகளை, ‘இரவி FM’ செயலியை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் “இரவி FM” இணைய வானொலி தொடக்கம் – சமூக மாற்றத்திற்கான புதிய ஒலி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் வேகமெடித்தன!
அடுத்த
ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனி ரேஷன் கடை அமைக்க கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026