தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முன்னேற்ற நிலையை நேரில் ஆய்வு செய்ய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் நீரேற்றும் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களுக்கு நீண்டநாள் நீர்விநியோகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“363 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் மாபெரும் திட்டம் — தூத்துக்குடியில் நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்ற நிலையங்களை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தென் மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது”
அடுத்த
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மாற்று வாய்ப்புகள் — தூத்துக்குடியில் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு, கடற்பாசி வளர்ப்பு பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026