தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் நீண்டநாளாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பகுதி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தண்ணீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக அறிந்த மேயர், உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக சென்று பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காணும் மேயரின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.