தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜர் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலைமையை நேரில் அறிய ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்.
மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் இருந்து மின்மோட்டார் மூலம் விரைவாக நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கூறினார். மேலும் பள்ளமாக உள்ள சாலைகளை சரளமாக்கும் பணிகள் நடைபெற்றுவரும் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக செல்லும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இம்மாவட்ட ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட்ராஜா, பணி மேற்பார்வையாளர் சோமு, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C ராஜேந்திரன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ், இளைஞர் அணி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“மழைநீரில் கால் நனைத்து மக்கள் பக்கம்… மாப்பிள்ளையூரணியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ சண்முகையா”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தீபம் ஏற்ற தடை – திருப்பரங்குன்றம் மலையில் அரசியல் சூடு உச்சம்!”
அடுத்த
கார்த்திகை பௌர்ணமியில் ஆன்மிக ஒளி பரவியது – பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு கோட்டையில் ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தில் பக்தர்களின் திரளான பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026