தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள நாயுடு மகாஜன சங்க கட்டடத்தை ஒட்டி மேற்குப் பகுதியில், சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 3.5 சென்ட் நிலம் உள்ளது. முன்னாள் காலங்களில் அந்த இடம் நமது சமுதாய மக்கள் ஈமக் கிரியைக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த இடத்தை போலி பட்டா மூலம் அபகரிக்க முயற்சி செய்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வருவாய்த் துறையிடம் சங்கத்தின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, பட்டாவை ரத்து செய்யக் கூடாது என கூறி பாலகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வராத நிலையில், போலி பட்டாவை அடிப்படையாகக் கொண்டு பாலகிருஷ்ணன் மேற்படி 3.5 சென்ட் இடத்தில் செட் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.
நேற்று (15.10.2025) நடைபெற்ற நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட டிரஸ்டிகள் விவேகானந்தன் (மேனேஜிங் டிரஸ்டி), சங்க செயலாளர் ரெங்கசாமி, மோகன், விவேகம் ரமேஷ், செல்லச் சாமி வெங்கடகிருஷ்ணன், ராஜாகாந்தி, குப்புசாமி, ஜெயக்குமார், ஆகியோர் உடனே அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, செட் அமைக்கும் பணிகளை நேற்று இரவு நிறுத்தினர். இது நமது சங்கத்திற்கு சொந்தமான இடம் என போர்டில் எழுதப்பட்டிருந்ததை பாலகிருஷ்ணன் அழித்துவிட்ட நிலையில், உடனே டிஜிட்டல் பேனர் அமைத்து ஒட்டப்பட்டது.
நமது சமுதாயத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இந்த இடத்தை முழுமையாக மீட்டெடுக்க நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டெடுக்க நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மழை வந்தா மகிழ்ச்சி... ஆனால் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!”
அடுத்த
பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு – உற்சாகமாக நடைபெற்ற விழா!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026