தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமன் என்ற ராமகிருஷ்ணன் தனது 47வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு சமூக நல செயல்களை மேற்கொண்டார்.
இன்று மதியம் தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள மகிழ்வகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்கி மகிழ்வகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்தார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், இது அவரின் 10வது ரத்த தானம் மற்றும் இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது தடவை ரத்த தானம் செய்துள்ளார்.
அதேவேளை, புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகத்தில் LIC முகவர் சக்திவேல் முருகன் தலைமையில் ராமகிருஷ்ணனின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குமரகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெயகணேஷ், நாகராஜ், முத்து, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சமூக நல சேவைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ராமகிருஷ்ணனின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூகப்பணிக்கு முன்னுதாரணம் — மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் மனிதநேய செயல்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“இந்திய அரசியலமைப்பு தினம்: ஜனநாயகத்தின் மதிப்புகளை போற்றுவோம் — வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026