தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார். இதனை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, நகரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார். லெவஞ்சிபுரம் மற்றும் சிவந்தாகுளம் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து, மேயர் நேரில் சென்று கண்காணிப்பு மேற்கொண்டார்.
சிவந்தாகுளம் பகுதியில் புதிய சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அந்த இடங்களிலும் ஆய்வு நடை பெற்றது.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். பணிகள் விரைவாக முடிவடைந்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் – மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது நலச் செயல் குறித்து விழிப்புணர்வு : “உணவை வீணாக்காதீர்” — Dr. சகா அழைப்பு!!
அடுத்த
“தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு – மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா வாழ்த்து”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026