தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அன்றாடப் பயணத்திற்காக பயன்படுத்தி வரும் அரசு பேருந்துகள் அடிக்கடி சேவை நிறுத்தப்படுவதால் மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் இருந்து சிவகளை – சாயர்புரம் – கூட்டாம்புளி – புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் தடம் எண் 147A பேருந்து அடிக்கடி சேவை நிறுத்தம் செய்யப்படுவது பொதுமக்கள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதுபோன்று பல்வேறு வழித்தடங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பேருந்து சேவை நிறுத்தப்படுவதால் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் நேரத்திற்கு இடம் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தலையீடு செய்து, பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு வழக்கம்போல் பேருந்து சேவைகள் தடையின்றி நடைபெற உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி – ஸ்ரீவைகுண்டம் வழித்தட பேருந்துகள் அடிக்கடி சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது!!
அடுத்த
தூத்துக்குடியில் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்கள், செல்போன் பாதுகாப்பாக ஒப்படைப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026