தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சங்கரன் இன்று காலை தூத்துக்குடி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் பணி செய்து கொண்டு இருந்தார்.
மார்க்கெட் எதிரே அண்ணா சிலை பின்புறம் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தார் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அந்த சாலையை பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சங்கரன் சிறிதும் யோசிக்காமல் பைப் லைன் இணைப்பதற்காக அருகில் தோண்டப்பட்டு மண் குவிக்கபட்டுள்ள இடத்தில் இருந்து மேடு பள்ளம் உள்ள சாலையை சீர் செய்வதற்கு மண்ணை மண்வெட்டி மூலம் தன் கைகளால் அள்ளி சாலையை சீரமைத்து பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார்.
இதை பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை ஒரு நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி
சோசியல் மீடியாவை கலக்கும் போக்குவரத்து தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
அடுத்த
போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி - வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026