தூத்துக்குடி ரோச் சிறுவர் பூங்காவில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பியூஸ் கேரியர் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பது பொதுமக்களின் கவலைக்குரியதாக உள்ளது. சிறுவர்கள் விளையாடும் இடத்திலேயே அந்த மின் அமைப்பு கைபடும் தூரத்தில் இருப்பது பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது “சிறுவர் பூங்கா என்பது குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடும் இடம். ஆனால் அங்கு மின்சாரம் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பின்றி இருப்பது மிகப்பெரிய அலட்சியம். மின்வாரியமும் தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் மீதான அக்கறையுடன் பேராபத்துகள் ஏற்படாத வகையில் முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
மின்சார துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டால், எதிர்பாராத விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புக்கு:
மின்னல் அம்ஜத்,
மாவட்ட தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு – சி.பி.ஐ (எம்.எல்),
தூத்துக்குடி மாவட்டம்.
செல்: 95009 10559.
தூத்துக்குடி
மின் கம்பத்தில் ஆபத்தான பியூஸ் கேரியர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்து!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏரல் கணேசபுரம் பகுதியில் சாதி சான்றிதழ் சிக்கலால் இளைஞர்கள் கல்வி இழப்பில் – அதிகாரிகளிடம் மனு கொடுக்க முடிவு!!
அடுத்த
“குறைகளை என்னிடம் சொல்லுங்கள் – நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்!” : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் உரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026