தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையில், பள்ளி வளாகத்தில் கொடி அசைத்து பேரணி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மேரி சீத்தா முன்னிலை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேச்சுக்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரவேல், என்.சி.சி. அலுவலர் ஜனார்த்தனம், மற்றும் ஆசிரியர்கள் நளினா செல்வமுத்துலெட்சுமி, லீமா, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுப் பணிகள் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் சந்திரன் மற்றும் என்.சி.சி. ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.

பேரணி பள்ளியிலிருந்து துங்கி சவேரியார்புரம் வரை சென்ற பின்னர் மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது. மாணவர்கள் மற்றும் சமூகத்தினருக்கு போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது.