சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் "புதுமைப்பெண் – தமிழ் புதல்வன் 2025–26 கல்வியாண்டு" தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் கல்வி எழுச்சியை முன்னிறுத்தும் இந்நிகழ்ச்சி, ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் காணொளி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
அங்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லினார். கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் கல்வி மரபை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கிரேஷா ஜேக்கப், வட்டார வளர்ச்சி சசிக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு கல்வி விழாவின் சிறப்பை உயர்த்தினர்.
கல்வியில் முன்னேற்றம் காணும் தமிழ்நாட்டின் புதிய பயணத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பில் கல்வி எழுச்சி விழா ஒட்டப்பிடாரத்தில் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“லயன்ஸ் டவுன் பட்டா ரத்து: மக்கள் கோபம் – முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நேரில் சமாதானம்!”
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு — பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை வடிகால் பணிகள் முன்னேற்றம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026