தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காகவும், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 23ஆம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, டூவிபுரத்தில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அவர், வரும் 23ஆம் தேதிக்குள் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, இதற்கு முன்பு நகர்மன்ற உறுப்பினராகவும், மாவட்ட மகளிரணி செயலாளராகவும், தூத்துக்குடி மாநகர மேயராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி தலைவியாக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி களமிறங்க விருப்பம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமமா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு–பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது!!
அடுத்த
தூத்துக்குடியில் வியாபார தளங்களில் தமிழ்ப்பெயர்கள் கட்டாயம் – ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026