செக்காரக்குடி பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ விடம், செக்காரக்குடி கிழக்கு பகுதி ஏ.வி.எம் திருமண மண்டபம் எதிரிலுள்ள பங்களா தெரு மக்கள், அப்பகுதியில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இபி போஸ்டை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அந்த கோரிக்கை விரைவாக நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியில் புதிய இபி போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மக்கள் சார்ந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு அளித்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏவிற்கு பங்களா தெரு மக்கள் நன்றி தெரிவித்தனர்.