தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2025) காமராஜ் கல்லூரில் வைத்து மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலருமான சுதா மற்றும் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி M.L., ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேற்படி நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நீதிபதிகள், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட துணை வன அலுவலர், கல்லூரி முதல்வர், கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார். மேற்படி சிறப்புரையில் சுற்றுசூழல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்றும், மரம் நடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மேற்படி மாபெரும் மரம் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி. கலையரசி ரீனா M. L., மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தூத்துக்குடி
மாபெரும் மரம் நடும் விழா - உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் நன்றி!!
அடுத்த
தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026