தூத்துக்குடி பீச் ரோட்டில் கடல் பகுதியில், தனியார் பங்களிப்புடன் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி பீச் ரோடு health zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் முதல் பெல் ஓட்டல் வரை சாலையின் இருபுறங்களிலும் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் பீச் ரோட்டில் கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
முகாமில் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி!!
அடுத்த
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தோழமை கட்சிகள் கலந்து கொண்ட வஃக்பு திருத்த மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026