தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் குமாரகிரி ஊராட்சி ஜன்னத்துள் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி, உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜன்னத்துள் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பிரச்சினையை தொலைபேசியில் தெரிவிக்க, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
அவர் நேரில் ஜன்னத்துள் நகருக்கு சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, முதல் கட்டமாக JCB இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், மழைநீர் வெளியேறிய உடன் தெருவில் சரள் அடித்து மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து,
1. புதுக்கோட்டை தெற்கு தெரு நியாயவிலைக்கடை முன்புறம்
2. சிறுப்பாடு மசூதி எதிர்புறம்
3. ஈசாக்கு நகர்
4. கலாம் நகர் – 1 & 2வது தெருக்கள்
ஆகிய பகுதிகளிலும் நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஏற்பாடு செய்து, உடனடி சரள் அடிக்கும் பணிகளுக்கும் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஊராட்சி செயலர் நாராயணன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஜன்னத்துள் நகரில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு – எம்.சி. சண்முகையா MLA நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“சுந்தரவேல்புரம் மழை நெருக்கடி: தற்காலிக சாலைக்கு உடனடி உத்தரவு – அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு”
அடுத்த
“இந்திய அரசியலமைப்பு தினம்: ஜனநாயகத்தின் மதிப்புகளை போற்றுவோம் — வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026