தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தருவை மைதானப் பகுதியில் மழைநீர் வெளியேற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் மழைநீர் சரியாக வெளியேறி, மீண்டும் நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமிஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மழைநீர் வடிகால்கள் சீராக செயல்படுகிறதா, எந்த இடத்திலும் தடை ஏற்படுகிறதா என்பதையும் மேயர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் தேவையான பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.