தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிபராசக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (25.11.25) நேரில் பார்வையிட்டார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
மேலும், மாவட்ட தொழில் மையம் அருகிலுள்ள செங்குளம் ஓடை வழியாக மழைநீர் சீராகப் பாயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் குழுவினர் நேரில் கண்காணித்தனர். ஆய்வின்போது தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உடனடி நிவாரணம் பெறுவதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்பி கனிமொழி கருணாநிதி ஆய்வு – ஆதிபராசக்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகம்!!
அடுத்த
G. V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026