தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னதானம், ஊர்வலங்கள் என பக்தி பரவசத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக நள்ளிரவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை காணவும் செய்திகளை சேகரிக்கவும் பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக்காரர்கள் அனுமதி அட்டை பெற்றிருந்த போதிலும், கோவில் நுழைவாயிலில் காவல்துறை ஒருவரையும் உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி அட்டை இருந்தும் தடுப்பதோடு மட்டுமின்றி, காவல்துறையினர் அலட்சியமான பதில் அளித்ததாக ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், விழாவின் சிறப்பான தருணங்களை பதிவு செய்ய முடியாமல் நுழைவாயிலிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரடியாக பதிவு செய்ய முடியாத நிலைமைக்கு காரணமான காவல்துறையின் நடவடிக்கை ஊடக உலகில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
குலசேகரபட்டினம் தசரா விழா – சூரசம்ஹார நிகழ்ச்சி செய்தியாளர்கள் தடை! காவல்துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு தூத்துக்குடியில் மரியாதை அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலி புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆனந்தகளிப்புடன் தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026