மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எட்டையாபுரம் பாரதி மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கும், அவர்களது இல்லத்தில் அமைந்துள்ள சிலைக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் சார் ஆட்சியர் ஹீமான்சூ மங்கள், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் JCP சங்கரநாராயணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர். முனியசாமி, பாரதியார் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், பேரூராட்சி உறுப்பினர்கள் மணிகண்டன், மாதவன், நகர துணை செயலாளர் மாரியப்பன், நகர பொருளாளர் தெய்வீந்திரன், வார்டு செயலாளர்கள் பச்சிராஜன், மரிக்கண்ணன், அருள்சுந்தர், சின்னப்பர், மஞ்சமாதா, இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொண்டரணி அமைப்பாளர் மாரிமுத்து பாண்டியன், நகர மகளிர் அணி அமைப்பாளர்கள் முருகலட்சுமி, கோமதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பாரதியாரின் புரட்சித்தீப தன்மையும், சமூக மாற்றத்திற்கான அவரின் பார்வையும் வலியுறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, பெரும் மரியாதையுடனும் பக்தி உணர்வோடும் நடைபெற்றது.