தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், தோப்புத் தெரு, வீரநாயக்கன்தட்டு, உப்பாற்று ஓடை, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக உருவான நிலைமையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தப் பகுதிகள் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்தில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளன. தற்போது கோரம்பள்ளம் குளத்தில் இருந்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் மாநகரப் பகுதிக்குள் புகாத வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பகுதிகளில் உள்ள நீரின் ஓட்டம், வடிகால் பாதைகள், நீர் தேக்கம் போன்ற விவரங்களை மேயர் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாநகர மன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மன்ற உறுப்பினர் முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை நிலைமையைக் கண்காணித்து மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை நிலைமைகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026