தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில், இரண்டாம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் உருவாகி வரும் புதிய பூங்கா மற்றும் ஓய்விடப் பணிகள் விரைவில் நிறைவு பெறும் வகையில் நடைபெறுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டார். பின்னர், கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் வைத்திருந்த கோரிக்கையின் பேரில் அந்த இடத்தினையும் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் அந்தோணி மார்சலின், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெப்பக்குளம் மற்றும் கந்தசாமிபுரம் பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!
அடுத்த
“மனுக்கள் குவிந்தாலும், தீர்வில் தாமதம் இல்லை!” — தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை"
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026