இளம் தலைமுறைக்கு திமுகவின் கொள்கைகள், சாதனைகள், வரலாற்றை எளிமையாக எடுத்துரைக்கும் நோக்கில் திமுக இளைஞரணி சார்பில் முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டு வரும் “முரசொலி பாசறை” பக்கம், தனது 1,000வது இதழை எட்டியுள்ளது.
இந்த சிறப்புமிக்க இதழின் பிரதியை திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், “முரசொலி பாசறை”யின் தொடர்ச்சியான பங்களிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இதழின் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூர்ந்தனர்.
முரசொலி பாசறை, திமுகவின் சிந்தனைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை இளம் தலைமுறைக்கு எளிய வடிவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
தூத்துக்குடி
முரசொலி பாசறை 1000வது இதழ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
அடுத்த
அதிமுக வளர்ச்சி பணிகளில் முனைப்பாக செயல்பட்ட சி.த.செல்லப்பாண்டியனை பாராட்டிய எடப்பாடி பழனிச்சாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026