தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுவாக வழங்கினர்.
இதில், தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவின் முக்கிய கோரிக்கை சங்கத்துக்கு சொந்தமான 3.5 சென்ட் இடத்தை, பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் போலியாக தன்னுடைய சொத்தாக பட்டா தயாரித்து, மாநகராட்சியில் தவறாக தீர்வை ரசீது பெற்றுள்ளார். அந்த போலியான தீர்வை ரசீதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சங்கம் கோரிக்கை வைத்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்கம் மனு — போலி பட்டா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்!!
அடுத்த
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026