சென்னை தாயகத்தில் மதிமுக மாநில இளைஞரணி சார்பில் சங்கிலி சந்தா தொகை வழங்கும் விழா எம்பி. துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி சார்பாக கட்சி இதழான சங்கொலிக்கு ரூ. 1,05,000 தொகையை தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன் மதிமுக முதன்மை செயலாளரும், எம்பி.,யுமான துரை வைகோவிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.