விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சந்திரகிரி–கொள்ளம்பரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் கே.கே.எம் கல் கோரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், PUCL தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் மீது நெல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் குளத்தூரில் மக்கள்தொகை திரண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்னல் அம்ஜத், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சாமு காந்தி உள்ளிட்டோர் பேசி, கல் கோரி நிறுவனத்தின் செயல்பாடுகள் சுற்றுப்புற சூழல், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், உடனடி நடவடிக்கையாக கல் கோரியை மூட மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்பு
குளத்தூர் சமூக செயல்பாட்டாளர் எபநேசர், அய்யனார்புரம் அரி ராம் ஜெயராமன், குளத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னச்சாமி, ஸ்ரீ வைகை கொண்டபெருமாள்புரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன், கிராம தலைவர் பழனிச்சாமி, மக்கள் நல இயக்க பொறுப்பாளர் முத்து மாடசாமி, அழகு தங்கம், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து பேசினர்.
குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்றனர். குளத்தூர் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
1. PUCL தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
2. சந்திரகிரி–கொள்ளம்பரம்பில் உள்ள கே.கே.எம் கல் கோரியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
3. கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதிக்க வேண்டும்.
4. குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் வகையில் நிரந்தர வசதி அமைக்க வேண்டும்.
5. குளத்தூர் – ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்கள் கிராமத்திலே வழங்க வேண்டும்.
6. ஸ்ரீ வைகை குண்டப்பெருமாள்புரம் கண்மாய் நீர்பிடிப்பு வருகால் புதியதாக அமைக்க வேண்டும்.
மாதவன் சால்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கண்மாய் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
கடலுக்குச் செல்லும் தண்ணீர் கண்மாயில் செல்ல ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
7. அய்யனார்புரம் கிராமத்தில் மீட்டெடுக்கப்பட்ட மேச்சல் தரை அனாதின நிலங்களை மக்களுக்கே வழங்க வேண்டும்.
8. வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் – துலுக்கன்குளம் பகுதியில் சிப்காட் நிலங்களை தனியார் உப்பளங்களுக்கு வழங்கக்கூடாது.
அப்பகுதியில் புதியதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி
குளத்தூரில் கல் கோரி எதிர்ப்பு உச்சம் – PUCL தலைவர் மீதான தாக்குதலுக்கும் கடும் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பலவேசக்காரன் கோவில் நிலம் மற்றும் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு — மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
இருசக்கர வாகனத்தில் திடீர் சுற்றுப்பயணம் – மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026