தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டில் உள்ள லயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
இந்த முயற்சியில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அதிமுக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 47 வது வார்டு குடியிருப்போர் நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மற்ற துணை செயலாளர் சகாயராஜ் (Ex. M.C), மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, பட்டா பிரச்சினையில் பொதுமக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியையும் வலியுறுத்தியது.
தூத்துக்குடி
லயன்ஸ் டவுன் பட்டா பிரச்னையில் மக்களின் பக்கம் நின்ற செல்லப்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் – “அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்” : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி
அடுத்த
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026