தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டயபுரம் ரோடு ஹவுஸிங் போர்டு பகுதியில் பெண்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு வரும் மகளிர் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்கள் பாதுகாப்புடன் ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. நடைபாதை, அமர்விடங்கள், பசுமை வளம் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேயர் விளக்கம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடன் இருந்தார். பணிகளை தரமான முறையில் விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
பெண்களுக்கு பாதுகாப்பும் பொழுதுபோக்கும்: தூத்துக்குடியில் மகளிர் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டுமானப் பணிகள் துவக்கம்; பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!!
அடுத்த
குறைந்த வாடகையில் நம்பகமான குட்டி யானை (லோடு ஆட்டோ) சேவை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026