தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம், அன்னை வேளாங்கன்னி நகர், முத்து நகர், இருதயம்மாள் நகர், புதிய முனியசாமிபுரம், தெற்கு சோட்டையைன்தோப்பு மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமில் 15 துறையின் கீழ் 43 அரசுத்துறை சார்ந்த முகாம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து பின்னா் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கி பொதுமக்களிடம் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற திராவிட மாடலின் படி அனைவருக்கும் தேவையானவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். திமுக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், கிராமநிர்வாக அலுவலா் பாலமுருகன், மற்றும் கப்பிக்குளம் பாபு, அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.