தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அலீம்கோ நிறுவனம் இணைந்து ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை (29.11.2025 – சனிக்கிழமை) போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதனங்களை பெற விண்ணப்பிக்கலாம்.
உடல் இயக்க குறைபாடு, 100% பார்வை குறைபாடு, தொழுநோய், மூளை முடக்குவாதம், செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறன்களை கொண்டவர்கள் அனைவரும் இந்த தேர்வு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முகாமை முன்னெடுத்து வரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P. கீதாஜீவன் M.Com., B.Ed., தெரிவித்ததாவது: “மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற இந்த முகாம் பெரும் வாய்ப்பாக இருக்கும். அனைத்து பயனாளிகளும் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார்.
மேலும், முகாமிற்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக தனிப்பட்ட உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 9789265909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதலை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
முகாமிற்கு செல்ல முடியாதவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு — போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் – வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு அவசர வேண்டுகோள்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ அவசர வேண்டுகோள்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உடனடி செயல்பாடு அவசியம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026