ஆரோக்கியபுரம் கே.வி.கே.சாமி மெமோரியல் எஜுகேஷன் சொசைட்டி மற்றும் விவிடி நினைவு ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சார்பில், ஸ்தாபகர் அமரர் கே.வி.கே.சாமி அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா ஆரோக்கியபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆரோக்கியபுரம் விவிடி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கே.வி.கே.சாமி அவர்களின் நினைவு இடத்தில், பள்ளியின் செயலாளர் பிரம்மாணந்தம் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாணவர்கள், மாணவிகள் கே.வி.கே.சாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி உரையாற்றியதோடு, நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பிலும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.