தூத்துக்குடியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கணினி பட்டா விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடியில் முதற்கட்டமாக நடைபெற்ற மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சியில் 3,624 பேர் மனு அளித்திருந்தனர். அதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவாய்துறையினர் சரி பார்த்து பட்டா வழங்கப்படுகிறது.
இதற்கு ஆட்சியர், ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுக்கள் முழுமையாக இந்த பணியை செய்து வருகின்றனர். இரண்டு கட்டமாக கணினி பட்டா இதுவரை 282 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் முறையாக முறைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு வழங்கப்படும். இதற்கான முழு பங்களிப்பு கலெக்டரும் ஈடுபட்டு பணியாற்றுகிறார். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி பொறியாளர் சரவணன், மாநக திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமி நாதன், கவிதா தேவி, துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தூத்துக்குடி
முதல்வரின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் தான் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026