தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவர்களை கொலை செய்து புதைப்பு" என பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு - எதிரியும் கொலை செய்யப்பட்டவர்களும் உறவினர்கள் என்பதும் அவர்களுக்கிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (28.07.2025) அன்று ஒருவர் காணாமல் போனதாக வந்த புகாரின்பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் அன்றைய தினமே காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து சந்தேக அடிப்படையில் காவல்துறையினர் சில நபர்களை விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேற்படி காணாமல் போனவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கின் எதிரியான தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரிதன் (25) என்பவரின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டதில் அவரது உறவினர்களான கொலையான இருவர்கள் தான் காரணம் என ரிதனுக்கும் கொலையானவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கிடையே உள்ள முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இறந்து போன நபர்கள் கஞ்சா தகவல்கள் குறித்து காவல்துறைக்கு எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கவில்லை.
எனவே மேற்படி செய்தி தொலைக்காட்சி, கஞ்சா போதை கும்பல் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தற்காக கஞ்சா கும்பல் கொலை செய்ததாக செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவிப்பதுடன், உறவினர்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது எனவும் மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடந்த இரண்டு பேர் கொலை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கந்தசாமிபுரம் ஆர்.சி. பெத்தனி நடுநிலைப் பள்ளியில் வைத்து 3, 11 மற்றும் 12 வது வார்டு பகுதி மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது!!
அடுத்த
மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வராத பட்சத்தில் தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நீட்டியது உதவிக்கரம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026