தூத்துக்குடி மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 5 பேரும், புதியதாக மனு அளிக்க வந்த 56 பேரும் கலந்து கொண்டனர். மொத்தம் 61 மனுதாரர்கள் இன்று தங்கள் பிரச்சினைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்வைத்தனர்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு குறையையும் கவனத்துடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், காவல் நிலையங்களில் வழங்கிய புகார் தொடர்பான விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதன்கிழமைகள் மக்கள் குறைகள் கேட்கும் நாளாக மாறின!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
அடுத்த
கோவில்பட்டியில் சமூக நீதி பயணம்: “ஒடுக்கப்பட்டோரின் அரணாக முதல்வர் ஸ்டாலின்” – ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026