தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி கிறிஸ்து அரசு நகர் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதி மக்களுடன் நேரடியாக உரையாடியபோது, குடியிருப்பு பகுதியில் பட்டா தொடர்பான சில பிரச்சனைகள் இருப்பதை அவர்கள் தெரிவித்தனர். மக்களின் கோரிக்கையை கவனமாக கேட்ட மேயர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின்படி, “மக்களின் நலனுக்காக தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று உறுதியளித்தார்.
இவ்வாய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்களின் பிரச்சனையை நேரில் சென்று கேட்டறிந்து, உடனடி தீர்வுகளுக்கான நடவடிக்கையை முன்னெடுத்த மேயரின் இந்த பார்வை, அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
“குடிமக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் தமிழக அரசு” – கிறிஸ்து அரசு நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மட்டக்கடையில் வடிகால் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
அடுத்த
“ஓரணியில் தமிழ்நாடு” – தூத்துக்குடியில் நாளை மாபெரும் பொதுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026