தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் அய்யா வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைச்சூடி அற்புதராஜ் தலைமையில், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர செயலாளர் முத்துச்செல்வம் மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.