ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை ஆர்.சி. சர்ச் வளாகத்தில் வைத்து இன்று மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமானது ஸ்காட் நிறுவனத்தலைவர் முனைவர் சு. கிளீட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படியும் திட்ட இயக்குனர் சார்லஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது. டாக்டர் கே.பி. ராஜா ஸ்டாலின், தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைமையேற்றும், வி. நோவா கோவில் பிள்ளை முன்னிலை வகித்து ஆரம்பித்து வைத்தார்கள். J. ராஜன், J. வெள்ளைச்சாமி, ஜசக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இம்முகாமில் மொத்தம் 98 நபர்கள் கலந்து கொண்டார்கள். 26 நபர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 9 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், 15 நபர்கள் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஸ்காட் நிர்மான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் வளர்ச்சி அலுவலர் பரமசிவன் குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை ஆர்.சி. சர்ச் வளாகத்தில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சட்ட உரிமைகள் கழகம் திறப்பு விழா - வக்கீல் ரமேஷ் பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026