தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தினர் (TSAPSA) தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடத்திய மாவட்ட அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேயர் பேசுகையில் இது போன்ற போட்டிகள் அவர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், (TSAPSA) சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் போட்டி நடுவர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், வீரர்கள், சகா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.