தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் வசிக்கும் மாணவி ஜெபா, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 2025 ஆம் ஆண்டுக்கான சிலம்பம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்து, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த சிறப்பிற்காக, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மாணவியை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, ஊக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

மாணவியின் வெற்றியைப் பாராட்டி, “நம் திருவைகுண்டம் மண்ணின் திறமைமிக்க இளம் தலைமுறையினர் மாநில அளவில் இப்படிப் பெரிய சாதனை செய்வது பெருமையாகும்” என எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, மங்கலக்குறிச்சி காங்கிரஸ் கிளை செயலாளர் கணேசன், மற்றும் மாணவி ஜெபாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.