தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வரி குடிநீர் இணைப்பு வரி மற்றும் சொத்து வரி, தொழில் வரி, போன்ற வரிகளை உயர்த்தி உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் உயர்த்திய வரிகளை கட்ட முடியாமல் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக எதிர்கட்சி கொறாடா கவுன்சிலர் மந்திர மூர்த்தி தலைமையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பின் போது கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றி செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோரிக்கை மனு ஏற்பு உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி!.., நன்றி!!
அடுத்த
தூத்துக்குடி 50 வது வார்டு பகுதியில் தார் சாலை வசதிகள் அமைத்து தர கவுன்சிலர் சரவணகுமார் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026