தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சண்முகபுரம் பகுதியில் உள்ள பனங்காட்டு தெருவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு கோரிக்கையை பொதுமக்கள் சமீபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களுக்கு மனுவாக அளித்திருந்தனர்.
இது குறித்து இன்று அமைச்சர் கீதா ஜீவன் நேரில் அந்தப் பகுதிக்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, கழிவு நீர் கால்வாயின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த சீரமைப்பு பணிகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். “எங்களது கோரிக்கையை உடனடியாக கவனித்து, திடீரென நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி,” என பொதுமக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
கழிவு நீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி – பனங்காட்டு தெருவுக்கு அதிரடியாக வந்த அமைச்சர் கீதா ஜீவன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் கலந்து ஆதரவு!!
அடுத்த
கனமழையில் சேதமான கதிர்வேல் நகர் சாலை – பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி பதில் – நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026