தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி சிவன் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர மக்களின் பங்களிப்பை மேம்படுத்தி, அவர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கலாம் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா இ.ஆ.பா அவர்கள், துணை மேயர் திருமதி ஜெனிட்டா அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு. சுரேஷ் குமார் அவர்கள், பகுதி சபா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.