பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜீக்கு சிறந்த ஆசிரியர்கான விருது வழங்கப்பட்டது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேல்ஸ் பல்கலைக்கழக சிவாலயா அரங்கில் நடைபெற்றது.

அதில் மிகச் சிறந்த 6 ஆசிரியர்களில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜ் ஆவார். அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது.

விழாவில் வேல்ஸ் நிறுவனர் டாக்டர் ஜி. கண்ணன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையாசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். விருது பெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.