தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரை சீராக்கும் பணிகளும், மக்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெப்பக்குளத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து இயற்கையை ரசிக்கவும், சுற்றி நடந்து பயிற்சி மேற்கொள்ளவும் ஏதுவாக கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இணைந்து கலந்து கொண்டனர்.