பெற்றோரை இழந்த அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து பிற பெற்றோரின் ஆதரவில்லாத குழந்தைகள் தங்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரை அவர்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையில் மாதந்தோறும் ரூ. 2000 உதவித் தொகை வழங்கிடும் "அன்புக்கரங்கள்" திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.