தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை பொருத்தமான இடங்களில் ஒழுங்குபடுத்தும் நோக்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையிலானார்.

வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு தங்கள் வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகளின் நலனில் மாநகராட்சியானது என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மதன் இ.கா.ப, மாநகர வியாபார சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான வியாபாரிகள் பங்கேற்றனர்.