இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார்.

விக்கிரமசிங்கபுரம் கோடைமேல் அமைந்துள்ள அழகியான் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை 181 கிலோமீட்டர் தூரம் வரை புதிய புவியீர்ப்பு கால்வாய் மூலம் செலுத்தி, நீர் பஞ்சம் காணும் தென்பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுமாறு அரசு ஆவன செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.