தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள்துறை ஊழல் பெரிச்சாளி அதிகாரிகளின் பேச்சை கேட்டு 22 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் தூத்துக்குடி & கோவில்பட்டி மனவளர்ச்சிக்குன்றிய குழந்தைகளுக்கான வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை கண்டித்தும்,
தற்போதைய ஆட்சியர் வந்ததிலிருந்து இந்த ஊழல் அதிகாரிகளின் பேச்சைக்கேட்டு நிறுத்தப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்கு!
பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்ந்து!
சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போதைய ஆட்சியாளரால் குறைக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்கு!
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத் தலைவர் கே.பி. கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சாலமன் ராஜ் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் ராஜ் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார் செயல் தலைவர் என்.பி.ஆர்.டி நம்புராஜன், மாநில தலைவர் (TARATDAC) வில்சன் உட்பட போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு நிர்வாகிகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் காவல்துறைக்கும் , மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து திடீரென மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணா - பதற்றம் பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் - ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பெருமாள் சாமி பிரதமருக்கு வலியுறுத்தல்!!
அடுத்த
தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை - அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் புடைச்சூழ ஊர்வலமாக சென்று பொதுமக்கள், வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி அழைப்பிதழ் வழங்கினர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026