மழைக்காலத்தில் நோய்கள் பரவும் அபாயம் அதிகரிப்பதை முன்னிட்டு, கலையும் கல்வியும் முனைவர் சகா. மா. சங்கர் பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சுகாதார வழிமுறைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார்.
மழைக் காலங்களில் வீட்டு கழிவறைகளை மேலும் அதிக கவனத்துடன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாம்பு, கரப்பான் பூச்சி, பல்லி, தவளை, பூரான், விஷ பூச்சிகள் போன்றவை கழிவறை பைப்புகளில் தஞ்சம் அடைவது அதிகம். எனவே குழந்தைகளை கழிவறையை பயன்படுத்தச் செய்வதற்கு முன் தண்ணீர் ஊற்றி, எதுவும் உள்ளதா என்பதை சரிபார்த்து பின்னர் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மழைக்காலங்களில் கழிவறைகளையும் சுற்றுப்புறங்களையும் அடிக்கடி சுத்தம் செய்வது கட்டாயம். வெளிப்புறம் காடுகள், முட்புதர்கள் போன்ற இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது, பயன்படுத்திய பின் நன்றாக தண்ணீர் ஊற்றி வெளியே வருவது ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
“நம் வாழ்விடத்தை நாமே சுத்தமாக வைத்தால் சிறு சிறு நோய்கள் வராது. வருமுன் காப்போம் என்பது ஒரு பழமொழி மட்டும் அல்ல; நம் வாழ்வியல் நடைமுறை கூட. என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம், சுத்தமாக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்வோம்,” என முனைவர் சகா. மா. சங்கர் தனது விழிப்புணர்வு பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது தொடர்பு எண்: 9944662279.
தூத்துக்குடி
முனைவர் சகா. மா. சங்கர்: மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பதிவு வெளியீடு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குழந்தைகள் நலன் துறை மண்டல விளையாட்டுப் போட்டிகள் – காமராஜ் கல்லூரியில் சிறப்பாக தொடக்கம்!!
அடுத்த
அய்யனடைப்பு அடுக்கு மாடிக் குடியிருப்பு திறப்பு விழா — கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026